![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb2lAq4agljDK6AavSFpvvaLzip6hSwBTShnZFKyMNk7kZwRhP8Eth0UtMxJ3zi4q3PhGUp7vA1aJW07roTNwMWxbg2YL0Rg9Pwk5yVldwECMWDfmyvhmrOcJ6WwDfXaGh8HAyPWh-x3vi/s320/heron.jpg)
நெடுஞ்சாலைக்கு குறுக்கே வெள்ளம் சூழ்ந்த வயலில் ஒரு நாரை நிற்கிறது. அது சிந்தனையில்
ஆழ்ந்தது போல், ஒற்றைக் காலில், அசட்டையாக
ஏதோ அவ்வயலே நாரைகளுக்கு சொந்தம் என்பது போல் நிற்கிறது.
காற்று தெளிவாய் நிசப்தமாய்.
இந்த இரண்டாம் வறண்ட நாளில் பனி உருகுகிறது.
அம்மாவும் மகளும்,
நாம் வாகன நிறுத்துமிடத்தில்
டோனட்ஸ் மற்றும் காபியுடன் அமர்ந்துள்ளோம்.
நாம் மௌனமாக உள்ளோம்.
ஒரு கணத்திற்கு நம்மிடையே உள்ள சுவர்
பிரபஞ்சத்திற்கு திறக்கிறது;
பிறகு மூடுகிறது.
மேலும் நீ தொடர்ந்து சொல்கிறாய்
உனக்கு என் வாழ்வை திரும்ப வாழ வேண்டாம்.
நன்றி: The Best American Poetry 1999
நல்லா இருக்குங்க.
ReplyDelete:)
ReplyDelete