![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf6Bknb2OZQ3omr_OMBddxjndSZRtKpAhzv4b7VYGoSR0tfPb-Av-_4XMP-q6RwJHAuAeUX0BlqrgK23-tdUjTqDDVjNSKkDn1GR-3-o3cOrQUGxCj33Ujnfpzye5EEzq7vRrp_XEDXA/s320/silence.jpg)
கொஞ்ச காலமாய் என் கூடவே
வசித்துவருகிறது நீ கண்டறியாத மவ்னம்
மவ்னம்தான் எனினும்
உனக்குச் சொல்லும் சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை
மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் உன் கள்ள மவ்னம்
போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்கொழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது
அப்போதெழும் பேரோலத்தில்
உன் வார்த்தைகள் குரலிழந்து போகும்