Thursday, April 1, 2010

பனிமுலை படைப்புக் கூட்டம்



பனிமுலை கலை இலக்கிய அமைப்பின் படைப்புக் கூட்டம் நாளை (ஏப்ரல் 2 2010, வெள்ளி மாலை 4 மணிக்கு அடையார் காந்தி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மேடை, மைக், நட்சத்திர பரபரப்பு, பார்வையாளர் களைப்பு இல்லாமல் ஒரு நெகிழ்வான எளிய முறையில் கூட்டம் நடை பெறும். புற்தரையில் அனைவரும் சமமாக அமர்ந்து படைப்புகளை வாசிக்கலாம். அது உங்கள் சொந்த படைப்புகளாகவோ அல்லது பிடித்தமான பிறரது படைப்புகளாகவோ இருக்கலாம். கவிதைகள், புனைவுகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்து வித எழுத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மிகுந்த கருத்து சுதந்திரத்துடன் விவாதிக்கலாம். இந்த வார சுவாரஸ்யங்கள், கசப்புகளை கைமாறலாம். பிரவீனின் இனிமையான புல்லாங்குழல் இசை கேட்கலாம். தேனீர் சியர்ஸ் அடித்து, மனம் நிறைய இனிய நினைவுகள் மற்றும் ஆழமான அனுபவங்களுடன் விடை பெறலாம்.



வாசிக்கப்படும் படைப்புகள் பனிமலை இணையதளத்தில் பிரசுரமாகி, பின்னர் பனிமலை காலாண்டிதழ் அச்சு வடிவிலும் இடம் பெறும். இதற்காக பங்குபெறுபவர்கள் தங்களின் படைப்பிகளின் ஒரு பிரதியை பனிமலைக்கு அளிக்குமாறு வேண்டுகிறோம். அனைவரும் வருக. ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக இடத்துக்கு வரலாம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணை அழைக்கலாம்: 9884772864. நன்றி.

- ஆசிரியர் குழு

No comments:

Post a Comment