Monday, April 5, 2010

மதன் கவிதைகள்

ஒட்டாமல் கேட்டல்



கிடைக்காமல் லைனில் கிடைத்த
யூஸரிடம் சற்று தள்ளி
தொலைபேசிக் கொண்டிருக்கிறான்
சக அலுவலன்
விடாமல்
வைப்ரேட்டிக் கொண்டிருக்கும்
அவனது அலைபேசி யதிர்வில்
கேட்டன
நடுவழியலையில் பொறிந்துதிர்ந்த
ஏதோ
யாரோ
வார்த்தைகளின்
சாம்பல் சத்தங்கள்


இடம் பொருள் கேவல்



எப்படியோ கையில் கிடைத்துவிட்ட
பிளேடைக் கீழே வைத்துக்
கிர்ர்றீச்சி விட்டாள்
குழந்தை
பல் கூசிவிட்டதாம்
பில்லிங் கவுண்ட்டரில்
எல்லோர் முன்பும்
அசிங்கமாகத் திட்டினார்
வளர்ந்தவர்
நா கூசவில்லையாம்

நீள் மௌனம்



நான் இங்கே தனியாக இருந்தேன்
அவள் அங்கே தனியாக இருந்தாள்
எங்கள் தனிமைகள்
புணர்ந்து கொண்டிருந்தன

No comments:

Post a Comment