Wednesday, June 2, 2010
அவனுடைய நாற்பத்து மூன்றாவது பிறந்தநாளுக்கு பிறகு - நளினி சங்கர்
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்
அவன் அம்மாவின் கடிதங்களின் வருகை
குறைந்து போயிருந்தது.
எப்பொழுதாவது உணவகங்களில் கை கழுவும்போதோ
முடிதிருத்தத்தின்போதோ
பார்க்க நேரும் கண்ணாடிகள் மீது
அவனுக்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அவைகள் அவனுடைய முகத்திற்கு பதிலாக
வேறு ஏதோ ஒரு முகத்தை காண்பிக்கின்றதாம்.
இப்போதெல்லாம்
எதிர்ப்படும் எந்த மார்பகங்களும்
அவனை கிளர்ச்சியடையச் செய்வதில்லை.
நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருந்து
சாவுகாசமாக கழிக்கும்
சிறுநீரின் சுகமே
அவனுக்கு போதுமாய் இருக்கின்றது
Posted by
பிரவீண்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்திரன்; குமார்,அருள்,தேவா,ஜெயகணேஷ்.
at
11:31 PM
1 comment:
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)