Sunday, April 18, 2010

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் - ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்।

அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன।

கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்।

பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது। போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.

நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை?
படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா?

எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்।

வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை। அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;

புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார்। இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி।

வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்।

அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

No comments:

Post a Comment