Wednesday, March 31, 2010

தமிழ்நதிக்கு என் பதில் - ஆர்.அபிலாஷ்



எனது சு.ராவின் கவிதைப் பதிவில் கவிஞர் தமிழ்நதி இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.


ஜெயமோகன் குறைந்தபட்சம் சு.ரா.வையாவது கவிஞர் என்று ஒத்துக்கொள்கிறாரா? அண்மைய கவிஞர்களில் முகுந்த் நாகராஜனைத் தவிர்த்து (தமிழில்) வேறெவரையும் கவிஞர் என்று அவர் கருதவில்லை என்று அறிந்தேன். நல்ல சில கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம். ஆனால், நல்ல கவிஞர்கள் இல்லையாம்:)

தமிழ் சுட்டிக் காட்டியுள்ள இந்த விமர்சன அராஜகம் கண்டிக்கத்தக்கது என்பதால் ஒரு தனிப்பதிவாகவே என் பதிலை தருகிறேன்.

அன்புள்ள தமிழ்நதி
ஜெ.மோவின் அக்கட்டுரையை நானும் படித்தேன். அசட்டுக் கருத்துக்கள். இன்றைய உலகக் கவிதை வெறும் நுண்சித்தரிப்புகளால் ஆனது மட்டுமே என்கிறார். யாருமே உருவக, படிம கவிதைகள் எழுதுவது இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு. சமீபமாக வெளியான 2008 Best American Poetry (ராபர்ட் பிளை தொகுத்தது) போன்ற நவீன கவிதை தொகுப்புகளை அமெரிக்க நூலகத்தில் படித்தேன். இன்றைய சமகால கவிஞர்கள் படிம, உருவக வடிவங்களை இன்னும் விட இல்லை. அதனோடு பழமொழிகளில் இருந்து கதை வடிவங்கள் வரை எண்ணிறாத புதுமைகளை முயன்ற படி இருக்கிறார்கள். சொல்லப்போனால் எளிய ஒழுக்க விழுமியங்களை தவிர்த்து விடும் சற்றே கலாச்சார கலகக்காரர்களாக பல கவிதைக் குரல்கள் தம்மை காட்டிக் கொள்கின்றன. இவை ஜெ.மோவுக்கு தோதானதாக் நிச்சயம் இருக்காது. உதாரணமாக ஒரு பெண்குறியின் மலைப்பிரசங்கம் என்ற கவிதையை சொல்ல வேண்டும். ஜெ.மோ பக்திக் காலகட்டத்தின் நெகிழ்ச்சியில் இருந்து வெளிவர விரும்பவில்லை. பெரும்பாலும் தனது எளிய கற்பனைகளை தன்னம்பிக்கையுடன் உரக்க சொல்லி நிறுவி விட முயல்கிறார். அவரது காக்கி நிக்கர் அணிவகுப்பு படையினர் முன் மட்டுமே இது எடுபடும். சுருக்கமாக சொல்வதானால், அவரது இப்படியான பிரசங்கங்களை படிக்கும் போது ஜுராஸிக் பார்க் நினைவு வருகிறது.
நன்றி.

No comments:

Post a Comment