Saturday, March 27, 2010

பனிமுலை- அறிமுகம்



பனிமுலை இலக்கிய, சமூக, அரசியல், கலாச்சார உரையாடல்கள் மற்றும் படைப்பாக்க பகிர்தலுக்கான ஒரு அமைப்பு. இது சென்னையை சார்ந்து இயங்குகிறது. இதற்கு பனிமுலை வாசகர் வட்டம் மற்றும் பனிமுலை படைப்பு வட்டம் என்று இரு தளங்கள் உண்டு. மாதம் இருமுறை சந்திக்கும் வாசக\படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பு அல்லது படைப்பாளி குறித்து விவாதித்து வருகிறார்கள். தங்கள் படைப்புகளையும் வாசித்து விவாதிக்கிறார்கள். தமிழின் முக்கிய படைப்பாளிகளும் கலந்து கொள்கிறார்கள். பனிமுலை நிகழ்வுகள் பற்றிய பதிவுகளும், அங்கு வாசிக்கப்படும் படைப்புகளும் இங்கு பிரசுரிக்கப்படும். பிற படைப்பாளிகளின் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. இவை தொகுக்கப்பட்டு காலாண்டிதழாகவும் வர உள்ளது.


முதல் சந்திப்பில் ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு நாவல் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. இது குறித்த அறிக்கையும், கட்டுரைகளும் விரைவில் இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

பனிமுலை மனந்திறந்த உரையாடலுக்கான ஒரு பொதுவெளி. அடுத்த கூட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளோர் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 9884772864

No comments:

Post a Comment