Friday, July 2, 2010

மதன் கவிதைகள்

மலைப்பாம்பின் மௌனம்
















சிகப்புக்கும், மஞ்சளுக்கும் இடையே
அமைதியாயிருந்தது
மஞ்சளுக்கும், பச்சைக்கும் இடையே
என்ஜின் உறுமல்களில்
சூடேறிக் கொண்டிருந்தது.


மலைப்பாம்பாய்ப்
பருத்துப் படுத்திருந்தது
வேகத்தடையொன்று.
சிக்னலின் சாத்தியங்களைப்
புறக்கணித்தபடி.


தற்காப்பு



வயலெட் நிறப் பூக்கள்
இறைந்து கிடக்கும் பூங்காவைக்
கடக்கையிலெல்லாம் அவற்றைக்
கை நிறைய அள்ளி வரும்
ஆசையை கவனமாய் தவிர்த்து விடுகிறேன்


பூக்களின் கீழே
உதிர்ந்து கிடக்கும்
நினைவுகளின் பயத்தால்

1 comment:

  1. Kavidhai miga arumai.
    Thodarndhu ezhudhungal.
    -Pudhupeyal

    ReplyDelete